Print this page

'தாக்குதலின் பின்னர் அரசியலில் மாற்றம்'

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் நாட்டின் அரசியலில்
மாற்றம் ஏற்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் வடக்கு - கிழக்கு மாகாண செயற்பாட்டாளர்களுடன் பத்தரமுல்லை - நெலும்
மாவத்தையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியின்போது, வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட
வேலைத்திட்டங்களை தவிர வேறு எந்த அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை
என்றும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.