Print this page

மொட்டுக் கட்சி மகளிர் அலுவலகத்திற்கு பூட்டு

September 29, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினரான கட்சியின் தலைமையகத்தில் உள்ள மகளிர் அமைப்பு அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட அதிகாரி வெளியேறியுள்ளதாக நெலும் மாவத்தை கட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட அலுவலகத்தின் இரண்டு அதிகாரிகள் அலுவலகத்திற்குச் சென்று அலுவலக அறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனைத்து கோப்புகளையும் கைப்பற்ற முயற்சித்துள்ளனர். மேலும் அவர் செய்யும் வேலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர்.

இதனை அடுத்து 'நான் யாருக்கும் சொல்ல மாட்டேன், எங்கேயும் போக மாட்டேன், போனால் சொல்லிவிட்டு போவேன்” என்று அந்த பெண் அதிகாரி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த பெண் மீண்டும் வர மாட்டேன் என்று கூறி சென்றார்.

தற்போது நெலும் மாவத்தை அலுவலகத்தில் உள்ள மகளிர் அமைப்பு அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.