Print this page

கோட்டாவுடன் ஒரே மேசையில் அமர மறுத்த சந்திரிக்கா

September 30, 2023

வியாழன் இரவு கொழும்பில் நடைபெற்ற சீன தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒரே மேசையில் அமர்ந்திருக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சீன மக்கள் குடியரசின் 74வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்தது. சீனத் தூதர் Qi Zhenhong தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் VIP பிரிவு, இந்த விருந்தினர்களுக்கு இடமளிக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகளை கவனமாகத் திட்டமிட்டிருந்தது.

உயிருடன் இருக்கும் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் - குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.