Print this page

மின் கட்டணம் மீண்டும் உயரும்

மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை மேலும் குறிப்பிட்டுள்ளார்.