Print this page

மரம் முறிந்து வீழ்ந்த பேருந்து விபத்தில் ஐவர் பரிதபகரமாக உயிரிழப்பு

லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்று பொலிசார் கூறுகின்றனர்.

மத்துகம டிப்போவிற்கு சொந்தமான இந்த பஸ் தெனியாவில் இருந்து கொழும்பு வந்து மீண்டும் தெனியாவிற்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து, பொலிஸார், ராணுவம் மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள் இணைந்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  

காயடைந்த மேலும் நால்வர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

Last modified on Friday, 06 October 2023 05:59