Print this page

எல்ஆர்சி தலைவராக பண்டுக நியமனம்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டக் கல்லூரியில் மூத்த பயிற்சியாளராக, இலங்கையில் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடைமுறையில் பாராட்டத்தக்க அனுபவத்தைப் பெற்றுள்ளார். பல மூத்த அரசாங்க பதவிகளை வகித்துள்ளார்.

இதற்கு முன்னர் சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகார சபையின் தலைவராகவும் விளையாட்டு அமைச்சின் சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் சட்ட ஆலோசகராகவும், சுற்றுலா ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றமை விசேட அம்சமாகும். 

Last modified on Monday, 09 October 2023 10:06