Print this page

பசில் அணியின் முக்கிய உறுப்பினர் கட்சித் தாவல்

மொட்டு கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த வசந்தா ஹந்தபாங்கொட புதிய கூட்டணியில் இணைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பில் அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா, எஸ். அமரசிங்க மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அவர் குழுவில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபையைக் கூட்டி புதிய கூட்டணிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் இந்த விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மொட்டுவிலுள்ள பெருமளவிலான தொழிற்சங்கங்கள் புதிய கூட்டணியின் வேலைத்திட்டத்தில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.