Print this page

பாராளுமன்றில் சுஜித் பெரேராவின் காற்சட்டையை கழட்ட முயன்ற டயானா!

பாராளுமன்ற வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இன்று (20) மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கும், சமகி ஜன்பலவேகவின் அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டாரவிற்கும் இடையில் சில விடயங்கள் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது கட்சியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தனது கையடக்கத் தொலைபேசியில் சம்பவத்தை வீடியோ எடுத்து  கமகேவுக்கும் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் பரபரப்பான சூழல் நிலவியதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,  டயானா கமகே தனது கால்சட்டையை கழற்றவும் முயற்சித்ததாக சுஜித் சஞ்சய குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் துணை சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.