Print this page

ஜனாதிபதியின் செயலால் கடுப்பில் மொட்டு அணி

நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தினால் பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும் என்றார். 

“கெஹலிய அமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அது எல்லாம் பொய் என்று மாறியது. ஆனால் இந்த விடயத்தில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது என ஜனாதிபதி தீர்மானித்திருக்கலாம். அதன்படி, மருத்துவராக இருக்கும் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், எங்களுக்கு சில கவலைகள் உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 5 பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி நீக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான். ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்கக் கூடாது. இதற்கு கட்சியாக நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.