Print this page

எரிபொருள் விலை உயர்வால் பஸ், ஆட்டோ கட்டணம் அதிகரிக்கப்படுமா?

November 01, 2023

டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த முறை கட்டண திருத்தம் எதுவும் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் உரிமையாளர்களும் போக்குவரத்து ஆணைக்குழுவும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போது கட்டணத்தை திருத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.