Print this page

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க சஜித் அணியில் ஒரு குழு திட்டம்

November 02, 2023

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நாட்டுக்கான நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரியப்படுத்த இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நுகேகொடை இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் இந்த விடயம் முதன்முறையாக பேசப்பட்டதாக அறியமுடிகிறது.

இதில் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டுள்ளார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நல்ல முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களித்துவிட்டு கிராமம் நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இங்கு கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.