Print this page

மைத்திரிபாலவின் சொத்து விபரங்களைக் கோரும் நீதிமன்றம்

November 02, 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் முழுமையான நட்டஈடு செலுத்தத் தவறியதால் அவர்களது சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2023 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை பிரமாணப் பத்திரங்கள் மூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.