Print this page

பசில் களமிறங்கினால் வெளியேறத் தயாராகும் மொட்டுக் குழு

November 05, 2023

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படும் பசில் ராஜபக்ஷ கட்சிக்கு முக்கியமான காலங்களில் பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டமையே இதற்குக் காரணம்.

பசில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த எம்.பி.க்கள் குழுவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கருத்து தெரிவிக்க உள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷ போட்டியிட்டால், எதிர்கட்சிக்கு ஆதரவாகவும், இல்லையெனில் ஆளும் கட்சியில் இருந்து ஒரு சக்தியை ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரிப்பதற்கும் இந்தக் குழு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான முக்கிய கலந்துரையாடல் பொஹொட்டுவவிலுள்ள சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.