Print this page

அரச ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு தெரியுமா?

November 06, 2023

2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதல் 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கும் இந்த சம்பள உயர்வு கிடைக்குமென தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும், சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் வரிவிதிப்பு அல்லது அரச சொத்துக்களை விற்று சம்பாதிக்க வேண்டும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.

15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு வருடத்திற்கு 180 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளது.