Print this page

ஜனாதிபதியின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்கட்சிகள்

November 13, 2023

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் அனைத்து அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதியமைச்சர் வழங்கிய தேநீர் விருந்தை சமகி ஜன பலவேக மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன புறக்கணித்துள்ளன.

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை சபை உணவக மண்டபத்தில் அனைவருக்கும் விசேட மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் விசேட மதிய உணவை மறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்டமையும் விசேட அம்சமாகும்.