Print this page

கான்ஸ்டபிளின் கழுதை அறுத்த இளம் பிக்கு கைது

November 17, 2023

தெனியாய பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் பிக்கு  ஒருவரால் நேற்று மாலை கத்தியால் வெட்டி படுகாயமடைந்துள்ளதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டுவன உடகோமடிய பகுதியைச் சேர்ந்த தெனியாய பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் விரித்தமுல்ல கமகே தனுஷ்க (89411) என்பவரின் கழுத்து வெட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த கான்ஸ்டபிள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விசாரணைகளின் போது, குறித்த கான்ஸ்டபிள் திருமணமானவர் எனவும், சந்தேக நபரின் சகோதரியுடன் தொடர்பு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

நேற்று கான்ஸ்டபிள் பிக்குவின் சகோதரியின் வீட்டுக்குச் சென்ற போது சந்தேகநபர் தொலைபேசி அழைப்பெடுத்து கான்ஸ்டபிளை பல்லேகம சம்போதி முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்து தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

17 வயதுடைய பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.