Print this page

மொட்டுவை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு அமைச்சரின் மகன் விடுத்த கோரிக்கை

November 23, 2023

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அண்மைய நாட்களில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்னவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அவரது மகன் சதுர சேனாரத்னவும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக சேனாரத்ன நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வசிப்பிடமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி சென்றதாக அறியமுடிகிறது.

நீண்ட நேரம் நலம் விசாரித்துவிட்டு, அரசியல் தகவல்களுடன், வரலாற்றுத் தகவல்களையும் குழுவினர் விவாதித்தனர்.

மொட்டுடனான பயணத்தை விரைவில் மாற்றுமாறு ஜனாதிபதியிடம் ராஜிதவின் மகன் சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.