Print this page

பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிக்கும் சஜித்!

November 30, 2023

இரண்டு வார காலத்திற்கு பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட 200 நிமிடங்களுக்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தியதாகக் கூறிய அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க, நேரத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக 552 நிமிடங்களை பயன்படுத்தியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நவம்பர் 14 மற்றும் 28 க்கு இடையில் 204 நிமிடங்களை பயன்படுத்தியதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலை பாராளுமன்ற உறுப்பினர்களால் அன்றைய அலுவல்களுக்கு புறம்பான விடயங்களுக்காக 50 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வைக் காணுமாறு சபாநாயகரை வலியுறுத்திய அவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலிருந்தும் ஒதுக்கப்பட்ட நேரத்தை இரு தரப்பினரும் வீணடிக்கும் விகிதத்தில் குறைக்க முன்மொழிந்தார்.