Print this page

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடுவதில் சிக்கல்

November 30, 2023

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தினால் வழங்க முடியாத நிலையில் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

ஏறக்குறைய 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாமல் குவிந்து கிடப்பதாக அவர் கூறினார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தமக்குக் கிடைத்ததாகவும், அதன்படி இந்த வாரத்திலிருந்து அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஓட்டுனர் உரிமத்தில் உள்ள பிரச்சனை அட்டைகள் இல்லாதது அல்ல. சமீபகாலமாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எல்சி திறக்க முடியவில்லை, அட்டை எடுக்க முடியவில்லை. அதன் பிறகு நாங்கள் அட்டைகளை கொண்டு வந்துள்ளோம். ஆனால் அட்டை அச்சிடும் இயந்திரங்களில் சிக்கல் ஏற்பட்டது. இந்த திங்கட்கிழமை மூன்று புதிய இயந்திரங்களைப் பெற்றோம். அதன் அச்சிடும் பணிகள் இந்த வாரம் தொடங்கும். இவற்றை இன்னும் 6 மாதங்களில் அச்சடித்து முடித்துவிடுவோம் என்று நம்புகிறேன் என்றார்.