Print this page

'அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்'

குருநாகல் வைத்தியசாலையில் பாதிப்புக்குள்ளான தாய்மாருக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வைத்தியர் முஹம்மத் ஷாபி மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் தாய்மார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அரசாங்கம் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியதுடன், கடந்த தினம் பாதுகாப்பு சபை கூட்டம் கூடியதாகவும் அதற்கு கார்தினலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.