Print this page

வரவு செலவுத் திட்டத்திற்குப் பின் அமைச்சரவை மாற்றம்

December 09, 2023

அடுத்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் அமைச்சர்கள் மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொட்டுவின் பலமான கோரிக்கையின் பேரில் இது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய பாடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இப்போதைக்கு, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த பதவிகளை ஹரின் பெர்னாண்டோ மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு ஜனாதிபதி வழங்கினார்.

ஆனால் ஒரே நபரால் பல விடயங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அரசியலமைப்பின் பிரகாரம் இருக்க வேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.