Print this page

அழுத்கடை நீதிமன்ற வளாகத்தில் தீ

December 10, 2023

அளுத்கடை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் தீ பரவியுள்ளது.

நேற்று (09) நள்ளிரவு தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரி வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.

தீயினால் நீதிமன்றத்தின் சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.