Print this page

பெற்றோல் டீசல் விலை 400 ரூபாவை கடக்கும்

December 12, 2023

எரிபொருளுக்கான VAT வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்குமென அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோல் 400 ரூபாவிற்கும் அதிகமாகவும், டீசல் ஒரு லீற்றர் கிட்டத்தட்ட 400 ரூபாவிற்கும் விலை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையுடன் நான்கு விதமான வரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும், ஒரு லீற்றர் எரிபொருளுக்கான வரிகள் 125 ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எரிபொருள் கட்டணத்துடன் நீர் மற்றும் மின்சார கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.