Print this page

15ஆம் திகதி சுகவீனமடையும் மொட்டு எம்பிக்கள்

December 12, 2023

மொட்டுவிகல் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து தற்போது சுயேட்சையாக செயற்படும் நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கட்சித் தலைவர்கள் எவரும் பங்கேற்பார்களா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை என நெலும் மாவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய அரசியல் நிலவரப்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதற்கான ஆயத்தம் நடந்து வருகிறது. 

Last modified on Tuesday, 12 December 2023 11:03