Print this page

இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி

December 14, 2023

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சு கூறியுள்ளது.

இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.