Print this page

மீண்டும் மஹிந்தவே தலைவர்

December 15, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க கட்சியின் தேசிய மாநாடு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேவை அக்கட்சியின் இறைமை மிக்க தலைவராக மஹிந்த ராஜபக்சவை முன்மொழிந்தார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அந்த பிரேரணையை உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட தேசிய மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

அக்கட்சியின் சுமார் 5000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் இணைந்துள்ளனர்.