Print this page

இ-சிகரெட் தடை

December 17, 2023

இ-சிகரெட்டை தடை செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

புகையிலைக்கு நிகரானதாகவும், வித்தியாசமான சுவைகள் கொண்டதாகவும் கருதப்படும் இந்த எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடை செய்யுமாறு உலக நாடுகளை அந்த அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பெரும்பாலானோர் இ-சிகரெட்டைப் பயன்படுத்துகிறார்கள், அதன் விளைவாக, அவர்கள் நிகோடினுக்கு அடிமையாகலாம், எனவே கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக ஆஸ்திரேலியாவிலும் இ-சிகரெட் தடை செய்யப்பட்டது.