Print this page

குறைகேள் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை

ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்பதற்காக எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனியான குறைகேள் அதிகாரி ஒருவரை நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அடுத்த வாரத்தில் இந்த அலுவலகம் செயற்பட தொடங்கும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.