Print this page

29 பாடசாலைகள் அவசரமாக மூடல்

December 19, 2023

கடும் மழை காரணமாக வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் வவுனியா மாவட்டத்தில் 09 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மழையினால் அந்தந்த மாகாணங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல அரச பாடசாலை கட்டிடங்களில் நலன்புரி முகாம்கள் நடாத்தப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, வடக்கில் தற்போது இயங்கிவரும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.