Print this page

சண்டையை நிறுத்துங்கள் - பிரதமர் அறிவுறுத்தல்

December 20, 2023

மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளை உடனடியாக நிறுத்தி மக்களின் அபிவிருத்தியில் தலையிடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.

ஆளுநர்களுக்கும், அரசியல் அதிகாரங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாகவும், சகல வேறுபாடுகளையும் களைந்து, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்வதாகவும் தனக்கு எப்போதும் முறைப்பாடுகள் வருவதாகவும் பிரதமர் இங்கு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடிக்கவும் பிரதமர் அறிவுறுத்தினார்.