Print this page

பல எம்பிக்கள் குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலாவில்..

December 22, 2023

பாராளுமன்றத்தில் உள்ள அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வருட இறுதியில் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல அரச நிறுவனங்களின் நிகழ்வுகள் கூட பிற்போடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விழாக்கள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.