Print this page

ஆதரவை அதிகரித்து கொள்ளும் பணியில் ஜனாதிபதி வேட்பாளர்

December 24, 2023

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி மற்ற கட்சிகளின் ஆதரவை எப்படி பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

அக்கட்சிகளின் ஆதரவுடன் 51% பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டவர்களில் தம்மிக்க பெரேராவும் அடங்குவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.