Print this page

பிரான்ஸில் மறைந்திருக்கும் பிரபல பாதாள உலகக் குழு தலைவர்

December 26, 2023

பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அரஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் சட்ட நடைமுறைப்படி அதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றார்.

டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவ்வாறே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால் அதற்கு காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதன் மூலம் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்றும் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.