Print this page

வைத்தியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

December 28, 2023

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காவிட்டால் வைத்தியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.