Print this page

வீட்டுக்குள் இருந்து தாயும் சேயும் சடலமாக மீட்பு

December 29, 2023

இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லயன் அறையொன்றில் இருந்து குழந்தையின் சடலமும், தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததையடுத்து, குழந்தையின் 21 வயதுடைய தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அலபாத பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலீசார் சந்தேகிக்கின்றனர்

சிவ நாதன் என்ற வசந்தகுமாரியின் கணவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியமை நீதவான் விசாரணையில் தெரியவந்துள்ளது.