Print this page

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணியயை ஆரம்பிக்கும் புதிய கூட்டணி

December 29, 2023

புதிய கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தையும் ஜனவரி 1ஆம் திகதி காலை ராஜகிரிய, லேக் டிரைவில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரச்சாரத்தையும் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

புதிய கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர்களான அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் இது இடம்பெறவுள்ளது.

புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் கட்சி அலுவலகம் ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதலில் வரவுள்ளதாகவும், அதற்கு முகங்கொடுக்கும் வகையில், புதிய கூட்டணி வேறு எந்த அமைப்புக்கும் நிகரில்லாத சக்தியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கட்சி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கட்சி அலுவலக செயற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.