Print this page

எச்சரிக்கை! சிறுவர்கள் உட்பட அனைவரும் கவனம்

December 30, 2023

இந்நாட்களில் சிறுவர்களிடையே இன்ஃபுளுவென்சா (Influenza) தொற்று அதிகம் பதிவாகி வருவதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர். 

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது மிகவும் அவசியமென சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இருமல், காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகளே தொற்றுக்குள்ளான சிறுவர்களிடம் அதிகளவில் அவதானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக காய்ச்சல் பரவும் எனின், அது இன்ஃபுளுவென்சா தொற்றாகவே காணப்படுமென வைத்தியர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, முகக்கவசம் அணிவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.