Print this page

அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகை

December 30, 2023

2023 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு அனர்த்தங்களினால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், மண்சரிவு, வீதி மறியல் போன்றவற்றினால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இச்சலுகைக்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுப்பைப் பெறுவதற்கு வசிப்பிட கிராம அலுவலரின் சிபாரிசுடன் கூடிய கோரிக்கையை நிறுவன தலைவர் ஊடாக தமக்கு அனுப்பி வைக்குமாறு அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகா விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.