Print this page

கண்டி தலதா மாளிகைக்கு அருகில் கெசினோ

புதிதாக 10 சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆனால் அதற்கு அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய சூதாட்ட விடுதிகளை அனுமதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“சூதாட்ட விடுதிகள் தொடர்பான புதிய சட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஐந்து வருட காலத்திற்கு உரிமம் வழங்குவதற்கு 500 மில்லியன் ரூபா அறவிடப்படுகின்றது. சூதாட்ட விடுதிகளுக்கான நுழைவுக் கட்டணத்தையும் அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். இலங்கையர்கள் சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்துவதே எமது நோக்கமாகும்” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“அரசாங்க வருவாயை அதிகரிக்க சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேசினோக்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசின் வருவாயை அதிகரிக்க மக்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதிலளித்த அத்துரலியே ரதன தேரர், கண்டி உள்ளிட்ட இரண்டு சூதாட்ட நிலையங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.