Print this page

டயானாவின் ஆதரவு பெற 10 கோடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக எம்.பி.க்களை வெற்றிகொள்ள பலமான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சில வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று ஆதரவு கேட்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிலர் பணம், பரிசு மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அண்மைய நாட்களில் அவ்வப்போது ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு வேட்பாளர் டயானா கமகேவிடம் 10 கோடி ரூபாய் ஏலத்தை முன்மொழிந்ததாகவும், அவர் அதனை மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.