Print this page

டயானாவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு தகுதியற்றவர் என கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (19) அனுமதி அளித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.