Print this page

பொலிஸாருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

இனிமேல் சிவில் உடையில் வாகனங்களை சோதனையிட வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரொஷான் குமாரதிலகவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு இன்று (20) காலை அலவ்வ பிரதேசத்தில் உள்ள ரொஷான் குமாரதிலக்கவின் வீட்டிற்கு சென்ற போதே பதில் பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த ரொஷான் குமாரதிலகவின் மனைவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டையும் வழங்கினார்.