Print this page

இளைஞர்கள் ஆபத்தில், வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக இருந்தது, இரண்டாவது காலாண்டில் அது 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

15-24 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினரின் வேலையின்மை விகிதம் இரண்டாவது காலாண்டில் 25.8 சதவீதமாக அதிகரித்திருப்பது ஒரு தீவிரமான சூழ்நிலை.

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.