Print this page

அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதி அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சுங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதற்கிணங்க, குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டார்.