Print this page

முன்னாள் இராணுவத் தளபதி சஜித்துடன் இணைவு

நாட்டைக் கட்டியெழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னெடுப்பில் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் கைகோர்த்தார்.

மூன்று தசாப்த கால கொடிய எல்.ரீ.ரி.ஈ பயங்கரவாத யுத்தத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான பணியை வழிநடத்திய ஒரு தளபதி போலவே இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதியுமான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நியமித்தார்.