Print this page

இதை செய்தால் ஐந்து வருட சிறை

February 03, 2024

இணையச் செயற்பாடுகள் தொடர்பான பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஆன்லைன் முறைகளின் பாதுகாப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

அதன் விதிமுறைகளின்படி, முன்னாள் காதலிகளின் புகைப்படங்களை வெளியிடுவது அல்லது யாரையாவது தேவையில்லாத பிரச்சனையில் சிக்க வைத்து 'கொடுமைப்படுத்துவது' 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

சட்டத்தின் பிரிவு 20 இதனை விவரிக்கிறது.