Print this page

இன்று அமைச்சரவைக்கு வரும் கஞ்சா விவகாரம்

February 05, 2024

கஞ்சாவை மருத்துவ தாவரமாக வளர்ப்பதற்கு முதலீட்டாளர்களை அழைப்பதற்கான சட்ட அதிகாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று (05) அமைச்சரவையில் சமர்பிக்க உள்நாட்டு மருத்துவ அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏற்றுமதிக்காக மட்டுமே மருத்துவ குணம் கொண்ட கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

அவை மருந்து உற்பத்தி நோக்கங்களுக்காக மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

முதலீட்டு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் இந்த கஞ்சா வளர்க்கப்பட உள்ளது.

மருத்துவ குணம் கொண்ட கஞ்சா சாகுபடிக்கு முதலீட்டாளர்களை அழைப்பது தொடர்பான சட்ட விதிமுறைகளை தயாரிப்பதற்கு ஆயுர்வேத திணைக்களத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லாததால், அதற்கான ஒப்புதலை பெறுவதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கஞ்சா செய்கை தொடர்பில் பல முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், அது தொடர்பான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சு நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதார அமைச்சு, ஏற்றுமதிக்கான மருத்துவ கஞ்சா  திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.