Print this page

சனத் நிஷாந்தவின் சாரதி விடுதலை

February 05, 2024

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில் இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்துள்ளார்.