Print this page

ரணிலுடன் கயந்த, சஜித் அணிக்குள் சலசலப்பு

February 06, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையும் தமது கட்சி கடுமையாக விமர்சிக்கும் வேளையில், ஜனாதிபதி இருக்கும் மேடையில் கயந்த கருணாதிலக்க ஏறுவது பாதகமானது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றம் சுமத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தலைமைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் எப்போதும் கருத்து வெளியிடும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிகழ்ச்சி ஒன்றில் இணைவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ அழைப்பாக இருந்தாலும் இந்நேரத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்த சீனியர்கள் குழுவினர் கேட்டுக் கொண்டதை அவர்கள் அறிந்திருக்கலாம்.

தம்புள்ளையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் கயந்த கருணாதிலக்கவும் இணைந்து கொண்டதாக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. 

Last modified on Tuesday, 06 February 2024 10:15