Print this page

அனுமதி இருந்தும் மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கெஹலிய

February 07, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று காலை பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையை கேட்பதில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஏனைய நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டேன் என அவர் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படும் போது அவர்களை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொதுவான நடைமுறையாகும்.